top of page

நீரின்றி



தரையில் விழுந்ததும்

துள்ளியது

துடித்தது


காற்று வெளியில்

கடைசி மூச்சு விட்டு

அடங்கியது


நிலைகுத்திய கண்ணில்

அலையடித்துக் கிடந்தது

ஒரு கடல்


மின்னிய செதில்களில்

நட்சத்திரங்களாய்

கொஞ்சம் கனவுகள்

Comments


Subscribe செய்யுங்கள். தொடர்பிலிருப்போம்!

bottom of page