சாலை
- மாதவராஜ்
- May 22
- 1 min read

பாம்புகள் அசையாதிருக்கும்
வெறும் தோலாய் மட்டும்
குறுக்கே பாய்ந்த நாய்கள்
குடல் சிதறிக் கிடக்கும்
எதோவொரு வாகனம்
சிந்திச் சென்ற
சில தானியங்களுக்காக
காடைகளும் மைனாக்களும்
இறக்கைகள் பிய்ந்து
எச்சம் போல ஒட்டியிருக்கும்
சிறகுகள் மட்டும் விரிந்திருக்க
சிலுவையில் அறையப்பட்ட ஏசுக்களாய்
ஓராயிரம் வண்ணத்துப் பூச்சிகள்
உற்றுப்பார்த்தால் தெரிகின்றன
சக்கரங்கள் உருண்டோடும்
இந்தச் சாலை வழியேதான்
காலத்தை நாம்
கடந்து கொண்டே இருக்கிறோம்!
நன்று