top of page
மாதவராஜ்



ரசிகன்
அந்த நடிகருடைய படத்தின் போஸ்டர் நகரின் முக்கிய வீதியில் ஒட்டப்பட்டு இருந்தது. யாரையோ ஆவேசமாக கைகளை நீட்டி எச்சரித்துக் கொண்டு இருந்தவரின் கண்களை யாரோ பிடுங்கி இருந்தார்கள்.
Apr 31 min read
7
0


நீ யார்? - 4
அந்த நேரங்களில் எனது சிந்தனையிலும் துடிப்பிலும் இருந்தது ஒன்றே ஒன்றுதான். பணி ஓய்வு பெறுவதற்கு இருந்த எட்டு ஆண்டுகளுக்குள் சங்கத் தலைமைக்கு இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களை உருவாக்கி விட வேண்டும் என்பதுதான் அது. எனக்கு நானே விதித்துக் கொண்டது. இந்தக் காரியத்தில் எனக்கு உறுதுணையாக இருந்ததும், வழிகாட்டியதும் தோழர்கள் சி.பி.கிருஷ்ணன், தோழர் போஸ்பாண்டியன், சோமசுந்தரம் ஆகியோர்.
Apr 34 min read
1
0


1
0


இருட்டு வெளிச்சம்
வலித்திருக்க வேண்டும். முனகிக்கொண்டான். காதில் பற்களை பதியவைத்த மூர்க்கம் பயம் தந்தது. விலகவும் மனம் கூடவில்லை. அபூர்வமான லயிப்பில் கரைந்து கொண்டிருந்தான். தைரியம் கூடி எதையும் இழந்துவிட சித்தமாக்கும் போதை தலைக்கேறி நின்றது. அம்மா சொன்ன கதையில் தங்கக் கோடாலி தரப் போகும் தேவதையாய் இவள் தெரிய ஆரம்பித்தாள்.
Apr 24 min read
62
0


நீ யார்? - 3
சங்கத்திற்குள் என்ன நடக்கிறது எனத் தெரிந்து கொள்ள நிர்வாகம் மெனக்கெடுவதும், நிர்வாகம் என்ன செய்கிறது எனத் தெரிந்து கொள்ள சங்கத்தரப்பில் முயற்சிப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். நிர்வாகம் ஊழியர்களைத் தாக்குவதற்கும், சங்கம் ஊழியர்களை தற்காத்துக் கொள்வதற்கும் தகவல்களை சேகரிக்கின்றன. கிடைக்கும் சின்னச் சின்னத் தகவல்களில் இருந்து அடுத்து என்ன அசைவு என்பதை ஊகித்தறிய முடியும். அதற்கான வாய்ப்புகளைக் கொடுக்காமல் இருப்பது முக்கியமானது
Apr 24 min read
0
0


அல்லாஹூ அக்பர்
அவர்கள் கடவுளின் பெயரால் அநியாயம் செய்யும் போது
நான் கடவுளின் பெயரால் நியாயம் கேட்பேன் என்று அர்த்தம்.
Apr 21 min read
2
0


குழந்தை மொழி
“அக்கா, இந்தச் செடியை சிரிக்க வையேன்”
“செடியை நீதான் அழ வைத்தாய். நீயே சிரிக்க வை.”
Apr 21 min read
7
0


இராஜகுமாரன் - வெளியீடு
இராஜகுமாரன் சிறுகதை தொகுப்பை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டிருந்தது. எழுத்தாளர் ஜெயகாந்தன் முன்னுரை எழுதியிருந்தார்.அந்த புத்தகத்திற்கும் எனக்கும் கிடைத்த மிகப் பெரிய பேறு அது.
Mar 311 min read
10
0


நீ யார்? - 2
எது உண்மையோ அதை எழுதியிருந்தார். பொறுப்பில் இருப்பவர்களுக்கு இந்த நேர்மை மிக முக்கியமானது. உண்மைகள் பதிவு செய்யப்பட்டுவிட்டால், இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் நீதி கிடைக்கும் வாய்ப்புண்டு. உண்மைகள் பதிவு செய்யப்படாமல் போகும்போது நீதி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிடும்.
Mar 314 min read
3
0


நீ யார்? - 1
தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்குவதற்கு வெறி கொண்டிருந்த
ஒரு நிர்வாகத்தைப் பற்றிய கதை இது.
தொழிற்சங்கத் தலைமை ஏற்ற ஒரு இளம் தலைமுறையை நசுக்க முயன்ற கதை.
ஒழுங்கு நடவடிக்கை என்னும் பெயரில் அடுக்கப்பட்ட பொய்களின் தோலை உரிக்கும் கதை. தொழிற்சங்கத்தின் முன்னே நிர்வாகம் தோற்ற கதை.
உண்மைக் கதை.
எனது கதையும் கூட.
Mar 303 min read
3
0


அப்போது பைத்தியங்களே திருடுவார்கள்
கலாச்சாரத்தின் ஒரு பகுதியான ஒழுக்கத்தை வாளாக்கி நீதிதேவதை கையில் ஒங்கியபடி காட்சியளிக்கிறாள். காவல்துறையும், நீதித்துறையும் ஒழுக்கத்தை காப்பாற்றுவதற்காக அல்லும் பகலுமாய் படாத பாடு படுகிறது. வேலைநிறுத்தம் செய்தவர்களை நடுராத்திரியில் தெருவில் இழுத்துச் செல்லும். கல்வியை வியாபாரமாக்காதே என்று ஆர்ப்பாட்டம் செய்தால் அடிவயிற்றில் மிதிக்கும். கோடிக்கணக்கில் வருமான வரி ஏய்த்தவர்களிடம் கெஞ்சிக்கொண்டு நிற்கும்.
Mar 305 min read
10
0


போதி நிலா
நிலாவுக்கு என்னைத் தெரியும். அப்பாவைத் தெரியும். தாத்தாவை தெரியும். தாத்தாவின் அப்பா, தாத்தாவின் தாத்தா என வழிவழியாய் எல்லோரையும் தெரியும். சரி. சுதிரையும், கவீஷையும் தெரியுமா? நிலா எங்கே பார்த்திருக்கப் போகிறது. ஸ்கூல் விட்டால் வீடு. வீடு விட்டால் ஸ்கூல். வீட்டில் புஸ்த்தகம், நோட்டு. அப்புறம் டி.வி தான் உலகம். உலகம் வீட்டிற்குள்ளேயே சுருங்கிப் போயிருக்கிறது.
Mar 294 min read
9
0
bottom of page